↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார். இதையடுத்து ட்வைன் ஸ்மித் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ட்வைன் ஸ்மித் 26 ரன்களில் அனுரீத் சிங் பந்து வீச்சில் பவுல்ட் ஆனார். அதேநேரம், பிரெண்டன் மெக்கல்லம் 44 பந்துகளில் அதிரடியாக 66 ரன்களை குவித்தார். சென்னை அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ரன்களை 171 ரன்களை குவித்துள்ளது. சுரேஷ் ரெய்னா மற்றும் டோணி களத்தில் நின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top