↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் காலை தொட்டு வணங்கி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் பெரோஷா கோட்லா மைதானத்தில் டெல்லி- மும்பை அணிகள் மோதின.
இந்த ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை அணியின் தலைமை வழிகாட்டியாக உள்ள சச்சின் டெண்டுல்கர், மைதானத்திற்குள் வந்தார்.
அப்போது டெல்லி அணியில் விளையாடும் யுவராஜ் சிங் பின் புறமாக வந்து சச்சினின் காலில் விழுந்தார்.
இதனையறிந்த சச்சின், அவரை எழுப்பி கட்டித் தழுவினார். பின்னர் ஆட்டம் குறித்த சில யோசனைகளை யுவராஜூக்கு வழங்கினார்.
முன்னதாக உலகக்கிண்ணப் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பேட்டியை பாதியில் விட்டுவிட்டு சச்சினை வந்து கட்டித்தழுவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top