↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லட்சுமிமேனனின் சினிமா கேரியரை கொம்பனுக்கு முன்பு, கொம்பனுக்கு பின்பு என்று பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பெல்லாம், அவர் எந்த இடத்தில் இருந்தாலும் கலகலப்பாக இருக்கும். மலையாளம் கலந்த தமிழில் பொறிந்து தள்ளிக்கொண்டேயிருப்பார். அதனால் அவரிடம் கதை கேட்க ஸ்பாட்டில் ஒரு கூட்டமே சுற்றியிருக்கும். ஆனால், அப்படி ஜாலியான விளையாட்டுப்பிள்ளையாக இருந்து வந்த லட்சுமிமேனன், கொம்பன் படத்தில் நடித்தபோது தனது சுட்டித்தனத்தை சுருட்டி வைத்துவிட்டு அமைதியை கடைபிடித்தாராம்.இத்தனைக்கும் அவருக்கு யாரும் எந்த கண்டிசனும் போடவில்லையாம்.

இருப்பினும், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கி விட்டதால் இனிமேல் ஆரம்ப காலம் மாதிரி படப்பிடிப்பு தளத்தில் ஓவராக வாயாடக்கூடாது என்று தானே முடிவு செய்து விட்டாராம் லட்சுமிமேனன். மேலும், ஸ்பாட்டில் அமர்ந்திருக்கும்போது தன்னருகே யாராவது அமர்ந்தால்கூட அவர்களாக ஏதாவது பேசினால் மட்டுமே வாய் திறக்கும் நடிகை மற்ற நேரங்களில் அமைதியே உருவாய் அமர்ந்திருக்கிறாராம். லட்சுமிமேனனின் இந்த மாற்றத்தைப்பார்த்து பொண்ணு ரொம்ப மெச்சூரிட்டியாயிடுச்சு என்று பேசிக்கொள்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top