
குத்தாட்டத்தில் இளைஞர்களை கவர்வதில் பெயர் போனவர் நடிகை அல்போன்சா. இவரது தனிப்பட்ட வாழ்கை பற்றி யாருக்கும் தெரியாது.
மயிலாடுதுறையை சேர்ந்த சுஜாதா என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அல்போன்சா மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில் ’எனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து வைத்துள்ளார்’ என்றும், தற்போது அல்போன்சா என்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்
”எங்களது கல்யாணம் 2013ம் ஆண்டு மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது . முதலில் திருமணத்துக்கு எனது கணவரின் நண்பர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்க வந்தார்.”
”எப்படியோ எனது கணவரை மயக்கி தன வலைக்குள் விழ வைத்துள்ளார், மேலும் என்னை தொடர்பு கொண்டு இந்த ஊரை விட்டு ஓடி விடு இல்லையென்றால் கொன்று விடுவேன்” என்று அல்போன்சா மிரட்டல் விடுக்கிறார் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.