↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாக்ஸ் ஆபீஸில் காஞ்சனா 2 மற்றும் ஓ காதல் கண்மணி ஆகிய இரு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகின்றனவாம். இரு படங்களையும் மாறி மாறி ரசிகர்கள் ரசித்துப் பார்க்க தியேட்டர்களில் திரளுவதால் இரு படங்களின் யூனிட்டாரும் மகிழ்ச்சியுடன் உள்ளனராம்.

மணிரத்தினத்திற்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருப்திகரமான படமாக கண்மணி அமைந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 14.3 கோடியை வசூலித்துள்ளதாம்.

அவரது கடைசி 2 படங்களான ராவணன் மற்றும் கடல் இரண்டும் அட்டர் பிளாப் படங்களாகும். ஆனால் அதற்கு நேர் மாறாக கண்மணி அமைந்துள்ளது.

மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மணி திரும்பி வந்துள்ள படம் கண்மணி என்று அனைவரும் சிலாகிக்கின்றனர். படத்தை விரும்பியும் பார்க்கின்றனர் - சர்ச்சைக்குரிய கதையாக இருந்தாலும் கூட.

இருப்பினும் காஞ்சனா 2 தான் மிகப் பெரிய வசூல் மழையை கொடுத்துள்ளதாம். ராகவா லாரன்ஸின் இப்படம் தமிழகம் தவிர கேரளா, கர்நாடகாவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறதாம்.

தமிழகத்தில் ரிலீஸான முதல் 2 நாட்களிலேயே இது ரூ. 10.83 கோடியை ஈட்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

காமெடியும் திகிலும் கலந்த பேய்ப் படமான இப்படம் காஞ்சனா படத்தின் 2ம் பாகமாகும். டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top