↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அருண் விஜய்யை காரில் வைத்து கொல்ல சதி? - Cineulagam
என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டு ரீஎண்ட்ரி கொடுத்தவர் அருண் விஜய். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் வா டீல்.
இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய அருண் விஜய் ‘இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கிருத்திகா கார் ஓட்டும் போது, நானும் சதீஷும் பின்னால் அமர்ந்திருப்போம்.
படத்தின் காட்சிகளை எல்லாம் கேட்டுவிட்டு, கியர் எப்படி போடுவது என்று என்னிடம் கேட்டார். ஆனால், நாங்களும் இதை விளையாட்டாக எடுத்து கொண்டு காட்சிக்கு சென்று விட்டோம்.
அப்போது கார்த்திகா காரில் உள்ள பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். உடனே கார் தாறுமாறாக ஓடியது. உடனே நான் சுதாரித்து காரை ஒருவழியாக நிதானத்துக்கு கொண்டுவந்து விட்டேன். ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பினோம் என்றுதான் சொல்லவேண்டும்’ என்று அவர் கூறியதை பலர் கேட்டு சிரித்தாலும், அருண் விஜய் மிகவும் பயத்துடன் தான் இதை கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top