↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

'மாஸ்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட சூர்யா தற்போது '24' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வரும் நிலையில் இந்த படக்குழுவினர்களுடன் நடிகை சமந்தாவும் சமீபத்தில் இணைந்து நடித்துவந்தார். இந்நிலையில் சமந்தா இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'யாவரும் நலம்', மனம் போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் இந்த திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சூர்யா, சமந்தா, கேதரீன் தெரசா, சத்யன், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு கிரண் டியோஹன்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னர் சூர்யா ஹரியின் இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top