தற்போது தமிழ் சினிமாவில் பேயாக வந்து அனைவரையும் பயம்புரித்தி வருபவர் டாப்ஸி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ஓ காதல் கண்மணி படத்தில் சொன்னதை போல திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு டாப்ஸி, திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வது நல்லதுதான். திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து செய்தால் அது இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினையாக இருக்கும்.
ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும்போது பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடலாம். இதனால் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது என்று கூறியுள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.