↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யா பேச ஆரம்பித்து விட்டால், நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாள் என்று தனது பேத்தி புராணம் பாடியுள்ளார் அமிதாப் பச்சன். தநது பிளாக்கில் பேத்தி ஆரத்யா குறித்து சிலாகித்து பூரித்து எழுதியுள்ளார் அமிதாப் பச்சன். ஆரத்யா நன்றாக கதை சொல்வாள் என்றும் அதைக் கேட்பதில் தனக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்றும் பச்சன் கூறுகிறார்.

3 வயதான ஆரத்யா, அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாவின் செல்ல மகள் ஆவர். தனது பேத்தி குறித்து அமிதாப் கூறுகையில், எதாவது பேசிக் கொண்டே இருக்கிறாள் ஆரத்யா. கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பாள். ரொம்ப மெச்சூர்டாக இருக்கிறாள். அவளுடன் இருப்பதே மிகச் சந்தோஷமான விஷயம். அதுவும் அவள் கூறும் கதைகளைக் கேட்பதில் பரம சந்தோஷம். விடாமல் பேசுவாள் ஆரத்யா. பேச ஆரம்பித்து விட்டால் நிறுத்த மாட்டாள். இடை இடையே கேள்விகள் வேறு சரமாரியாக வந்து விழும்.. நாம் பதில் சொல்லியாக வேண்டும். அருமையான அனுபவம் இது.

தனது பிரண்ட்ஸ் குறித்தும், தனது பொம்மைகள் குறித்தும், தனது வீடு குறித்தும், தனது வீட்டில் உள்ளோர் குறித்தும் கதை கதையாகப் பேசுவாள். இதுதான் குழந்தைத்தனத்தின் அருமையான தருணங்கள். இந்தப் பெரிய உலகுக்குள் எக்ஸ்போஸ் ஆவற்கு முன்பு இந்த அருமையான மகிழ்ச்சியான தருணத்தை குழந்தைகள் சந்திக்கிறார்கள்... என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன். 2007ல் திருமணமான அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடிக்கு 2011ல் ஆரத்யா பிறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top