
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார்.
பின் சில கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலக, தயாரிப்பாளர் ஸ்ருதி மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ் திரையுலக சங்கங்களின் தலையீட்டின் பேரில் அவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் ஸ்ருதிக்கு மறுபடியும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கான ஸ்ருதி வாங்கிய முன்பணத்தை இன்னும் திருப்பி தரவில்லையாம்.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசனை ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்கலாம் என்ற யோசனையை இயக்குனர் வம்சி முன்வைத்துள்ளார்.
எனவே ஸ்ருதிஹாசன் தற்போது வாங்கிய முன்பணத்தை திருப்பி தருவாரா அல்லது படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறாரா என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.