↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காதலி படத்தை வாட்ஸ்அப்பில் பரப்பிய வாலிபர் எழிலன் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வாட்ஸ்அப் பயனாளிகள் பலருக்கும், ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் வந்தவண்ணம் இருந்தன. மேலும், அந்த இளம் பெண் பெயரை போட்டு, இவர் இரு ஆண்களை காதலித்து ஏமாற்றியவர் என்ற வகையில் தகவல்களும் அதனுடன் இருந்தன.

அந்த படத்தில் இருப்பது கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் எழிலன் (25), என்பதும், உடன் இருப்பது அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது. அந்த கல்லூரி மாணவி, வேறு ஒரு வாலிபருடன் நட்பு வைத்ததால் ஆத்திரமடைந்த எழிலன் இவ்வாறு வாட்ஸ்அப்பில் தங்களது படங்களை அனுப்பி வைத்திருந்துள்ளார். மேலும், அந்த பெண்ணுடன் எழிலன் பேசும், தொலைபேசி உரையாடலும், வாட்ஸ்அப் மூலம் உலவியது. அதில், என்னை ஏமாற்றிய உன்னை சும்மா விடமாட்டேன், வாட்ஸ்அப்பில் படத்தை போடுவேன் என்று மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில், அந்த மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எழிலனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


அந்த மாணவி, திருச்சி கல்லூரியில் படித்து வந்ததும், இந்த தொல்லைகள் காரணமாக, அவரது பெற்றோர் படிப்பை நிறுத்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் வெளியிட்ட போட்டோவுக்காக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்ட ஆசிரியை, தனது மாணவருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தொடர்பாக, வாட்ஸ்அப்பில் வேறு சிலரின் போட்டோக்களை போட்டு வதந்தி பரப்பி மகிழ்ந்தனர் வாட்ஸ்அப் பயனாளிகள். எனவே, இனிமேல், இதுபோன்ற படங்களை ஃபார்வேர்டு செய்யும்போது யோசித்து செய்வது அவசியம் என்ற பாடத்தை இந்த கைது நடவடிக்கை கற்றுக்கொடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top