↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காலிறுதிப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹேராத் களமிறங்குவார் என்று இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலக்க்கிண்ண லீக் ஆட்டத்தில் 36 வயதான இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் காயமடைந்தார்.
கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2 ஆட்டங்களில் அவரால் விளையாட முடியவில்லை. இதனால் காலிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் ஹேராத்தின் காயம் விரைவாக குணமடைந்து வருகிறது என்றும், அவர் காலிறுதி ஆட்டத்துக்கு உடல் தகுதி பெறுவார் எனவும் இலங்கை அணியின் தெரிவு குழு தலைவர் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருகின்ற 18ம் திகதி சிட்னியில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top