↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது ஜிம்பாப்வே அணியை வெல்ல உதவியதாக இந்திய அணியின் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த 6 போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் எதிரணியினரை ஆல் அவுட்டாக்கியுள்ளது. 

நேற்று நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி திணறியபோது கேப்டன் டோணியும், சுரேஷ் ரெய்னாவும் நின்று ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

இந்த போட்டி குறித்து டோணி கூறுகையில், 


ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது மற்றும் டி20 போட்டிகளில் கடினமான இலக்கை எட்ட முயன்றது தான் ஜிம்பாப்வேவை சேஸ் செய்து வெற்றி பெற உதவியது. சரியான நேரத்தில் ரெய்னா சதம் அடித்தார் என்றார். வரும் 19ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கும் காலிறுதிப் போட்டியில் இந்தியா வங்கதேச அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top