↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad   செல்ஃபியால் சிக்கும் ஹீரோயின்கள்

நடிகைகளில் பலர் செல்ஃபி எடுத்து அதை இணைய தளத்தில் வெளியிடும் பாணி அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தவர் திரிஷா. விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் ஏராளமான செல்ஃபி படங்களை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். அவரது பாணியை பின்பற்றத் தொடங்கி இருக்கிறார் பிரியாமணி. சமீபத்தில் வீட்டில் செல்லபிராணியாக வளர்க்கும் தனது நாய்க்கு முத்தம் கொடுக்கும் செல்ஃபி படத்தை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து எங்கெல்லாம் செல்ஃபி எடுக்கலாம் என்று எண்ணுகிறாரோ எடுத்து உடனடியாக அதை இணைய தள பக்கங்களில் வெளியிடுகிறார்.

இந்த விஷயத்தில் மேலும் தீவிரமாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பதற்காக வெவ்வேறு லொகேஷனுக்கு செல்கிறார். அங்கிருந்தபடி எடுக்கும் செல்ஃபி போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதுபோல் வெளியாகும் சில நடிகைகளின் படங்களை விஷமிகள் சிலர் மார்பிங் எனப்படும் வெட்டு ஒட்டு வேலைகள் செய்து அதை நிர்வாண படமாகவோ, டாப் லெஸ் படங்களாகவோ வெளியிட்டு அவ்வப்போது தலைவலி ஏற்படுத்தவும் தவறுவதில்லை. சமீபத்தில் இப்படியொரு சிக்கலில் சிக்கிக்கொண்டு ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் அவதிப்பட்டனர். இனியாவது உஷாரா இருப்பார்களா ஹீரோயின்கள் என்கிறது கோலிவுட்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top