↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட குரங்கு ஒன்றை சுமார் 20 நிமிடம் போராடி மற்றொரு குரங்கு காப்பாற்றியுள்ளது.
கான்பூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்து கொண்டு இருந்த குரங்குகளில் ஒன்று மின்சார ரயிலுக்காக செல்லும் எலக்ட்ரிக் வயரில் கைவைத்துள்ளது.

இதனால் மின்சாரம் தாக்கப்பட்டு, அந்த குரங்கு ரயில் பிளாட்பாரத்திற்கு இடையில் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அந்த குரங்கை அதன் உடனிருந்த மற்றொரு குரங்கு சுமார் 20 நிமிடம் போராடி காப்பாற்றியுள்ளது.

இந்த அதிசய சம்பவம் அங்கு கூடியிருந்த பலரால் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காணொளியில், மயங்கிய நிலையில் இருக்கும் குரங்கினை, மற்ற குரங்கு கடித்து மற்றும் அடித்து சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்தது பதிவாகியுள்ளது.

பின்னர். அருகில் ஓடிய கால்வாய் தன்ணீருக்குள் குரங்கை தள்ளி விட்டு, மயங்கிய குரங்குக்கு சுய நினைவை வரவைத்துள்ளது.

மேலும் தற்பொது இணையம் மற்றும் சமூக ஊடங்களில் இந்த காணொளி மிக வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top