↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் மாற்றங்களில் முக்கிய பங்களித்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். ஆண்களை மையப்படுத்தியே வந்த சினிமாவில் பெண்ணிற்கு முக்கியத்தும் கொடுத்து தமிழ் சினிமாவில் பல புரட்சியை செய்தவர். அவருடைய கடைசி நாளான இன்று தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் பாலச்சந்தர் வீட்டுக்கு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் இளையதளபதி விஜய் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பாலச்சந்தர் பற்றி சில வார்த்தைகள் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கவில்லையென்றாலும், உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நடித்தது எனக்கு பெரிய பாக்கியம்” என்று கூறியுள்ளார். கவிதாலயா புரொடக்‌ஷனில் விஜய் திருமலை என்ற படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் சினிமா வாழ்க்கையில் திருமலை படத்துக்கு முக்கியத்துவம் அதிகம் தான்,..

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top