↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆந்திரா மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விரிவுரையாளர் மீது கல்லூரி மாணவி ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம் நல்லப்பாடு என்ற இடத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் பணி புரியும் வெங்கட்ரமணா என்பவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்த போது வாசலில் காத்திருந்த இளம்பெண் அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த வெங்கட்ரமணா, அந்த பெண்ணின் கையை தட்டிவிட்டதில் பெண்ணின் முகத்திலும் ஆசிட் தெறித்துள்ளது.
ஆசிட் வீச்சில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பொலிசாரின் விசாரணையில் ஆசிட் வீசிய இளம்பெண் சவூஜினியா என்பதும் நாரசுவ்ராவ் பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் அவர் படித்த போது அங்கு விரிவுரையாளராக இருந்த வெங்கட்ரமணாவை காதலித்ததும் தெரியவந்ததுள்ளது.

முதலில் திருமணம் செய்து கொள்ளவதாக உறுதியளித்த வெங்கட்ரமணா, நான் மேற்படிப்புக்காக சென்ற பின்னர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரை பழிவாங்குவதற்காக ஆசிட் வீசியதாக சவூஜினியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top