↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad வீரம் படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள அஜீத், சில கெட்டப்புகளிலும் நடித்திருக்கிறார். அதற்காக 
தனது பாடிலாங்குவேஜையும் மாற்றியுள்ளார். முக்கியமாக சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்தவர், இந்த படத்திலும் அதை தொடர்ந்தபோதும், ஒரு யூத்புல்லான வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த சேஞ்சுக்காக சில மாதங்களை எடுத்துக்கொண்ட அஜீத், அந்த கதாபாத்திரம் ரொம்ப கேசுவலாக, கூலாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த சமயத்தில் படப்பிடிப்புக்கு சில இடையூறுகள் ஏறபட்டபோதும், அஜீத் ரொம்ப கூலாகவே இருந்தாராம். அதைப்பார்த்து, என்ன இவர் இத்தனை பிரச்சினை நடக்கிறது எதையும் பொருட்படுத்தாமல் இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டாராம்.

அதை அப்போது அஜீத்திடம் காட்டிக்கொள்ளாத அவர், பின்னர் ஒருநாள் கேட்டபோது, அப்போது நான் நடித்து வந்த கெட்டப் ரொம்ப யூத்தானது மட்டுமல்லாது நான் ரொம்ப கூலாக நடிக்க வேண்டிய கதாபாத்திரம். அப்படியிருக்கும்போது இங்கு நடக்கிற பிரச்சினைகளை என் மனதில போட்டுக்கொணடால், அதன் பிரதிபலிப்புதான் முகத்தில் வெளிப்படும். அதனால்தான் எல்லா பிரச்சினைகளையும் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்று எனக்கு எதுவும் சம்பந்தமே இல்லாததுபோல் இருநதேன் என்று அவரிடம் சொன்னாராம் அஜீத்.

அஜீத் டென்சனை காட்டிக்கொள்ளாததின் காரணத்தை அதன்பிறகுதான் தெரிந்து கொண்டு தெளிவு பெற்றாராம் கெளதம்மேனன்.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top