↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி கூறுகையில், தொடக்கத்தில் இருந்தே பந்துவீச்சு மிக அபாரமாக இருந்தது, இதற்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம்.
ஆடுகளத்தில் ஈரப்பதம் இருந்தாலும், சரியாக பயன்படுத்திக் கொண்டு நேர்த்தியாக பந்துவீசினார்கள்.
மும்பை அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருந்தது. எங்களது பந்துவீச்சு குறித்து நான் அதிகம் கவலைப்பட்டேன். தொடக்கத்தில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் 183 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.
ஹர்பஜன்சிங்கை முன்னதாக களம் இறங்கியதில் ஆச்சரியம் இல்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடியதால் மும்பை அணி அவரை முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பி வைத்தது.
சென்னை வீரர்களின் இதே ஆட்டம் தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top