↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி' படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை சமீபத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது 'வேலையில்லா பட்டதாரி' குழுவினர்களுடன் இணைந்து இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் 'மாரி' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமாகும் 'விஜய் ஜேசுதாஸ்' அவர்களும் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை நேற்றுடன் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வித்தியாசமான போலீஸ் கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ள விஜய் ஜேசுதாஸ் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'மாரி படத்தில் எனக்கு உட்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தனுஷ், மற்றும் பாலாஜி மோகனுடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது., அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ ஷங்கர், காளி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனிருத் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும், பிரசன்னா எடிட்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top