↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரப்பர் பாடி நடிகர்-இயக்குனரும், ஸ்டைல் நடிகரின் நாயகி என்று பெருமையாக பேசிய நடிகைக்கும் இடையே நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து வருகிறதாம். நம்பர் நடிகையுடன் காதல் முறிந்த பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார் அந்த ரப்பர் பாடி நடிகர்-இயக்குனர். பாலிவுட் நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகருக்கும், அவர் இயக்கத்தில் நடித்த வாரிசு நடிகைக்கும் இடையே காதல் என்று பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனருக்கும், கன்னட நடிகை ஒருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் வாரிசு நடிகைக்கும், ரப்பர் பாடிக்கும் இடையே தான் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து வருகிறதாம். இருவரும் நள்ளிரவில் சந்திக்கிறார்களாம். அவ்வாறு சந்திக்கையில் இரவு நேரம் செல்வது கூடத் தெரியாமல் விடிய விடிய பேசுகிறார்களாம். வாரிசு நடிகையுடன் பெரும்பாலும் பாலிவுட்டின் சீனியர் ஹீரோக்கள் தான் நடித்து வருகிறார்கள்.

இளம் ஹீரோக்கள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுக்கிறார்கள். அவருடன் நடித்தால் நாங்கள் அவரின் தம்பி போல இருப்போம், வேறு நடிகைய ஒப்பந்தம் செய்யுங்கள் என்கிறார்களாம் இளம் ஹீரோக்கள். எந்த ஹீரோ என்ன கூறினால் எனக்கென்ன, நான் இப்படித் தான் இருப்பேன் என கூறும் துணிச்சலானவர் அந்த நடிகை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top