↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
kavya1-600x300
‘ காசி’ , ‘ என் மன வானில்’ படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். தற்போது ‘ஆகாஷவானி‘ மலையாள படத்தில் நடித்து வருகிறார். கஹாஸ் மில்லன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் இயக்குனருக்கும், காவ்யாவுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. படத்தில் காவ்யாவின் கதாபாத்திரத்துக்கு அவரை டப்பிங் பேசவிடாமல் வேறு ஒரு பெண் டப்பிங் கலைஞரை வைத்து பேச சொன்னார் இயக்குனர். இது காவ்யாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் டப்பிங், படப்பிடிப்பு பணிகள் தடைபட்டது. இதுபற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ‘டப்பிங் விஷயத்தில் எனக்கும் காவ்யாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பட்டது.
ஆனால் படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்டப்படி தாமதம் இல்லாமல் தொடர்ந்து நடக்கிறது. காவ்யா வேறுவொரு படப்பிடிப்பிலும் இருக்கிறார். அப்போது அவருக்கு தொண்டையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் வந்து டப்பிங் பேச எண்ணினார். ஆனால் முடியவில்லை.
எங்களுக்கு நேரம் குறைவாக இருந்ததால் விம்மி என்ற டப்பிங் கலைஞரை காவ்யாவுக்கு டப்பிங் பேச வைத்தோம். இது காவ்யாவுக்கும் தெரியும்’ என்றார். ஆனால் இயக்குனர் எதையும் சொல்லாமல் வேறொருவரை வைத்து டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக காவ்யா தரப்பு புகார் கூறுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top