கத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு சமந்தா தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். விக்ரம், சூர்யா படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.
விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும் போது, விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய டைரக்ஷனில் நடிக்க வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.
சாலையில் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களை திரைக்கதையாக கொண்ட படம், ‘பத்து எண்றதுக்குள்ள.’ இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம், இதுதான்,” என்கிறார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.