↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நேபாள நாட்டில் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகை சமந்தா அந்த படத்தின் தன்னுடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் சன் ஆப் சத்தியமுர்த்தி' படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருந்த நடிகை சமந்தா தற்போது அனைத்து பணிகளில் இருந்து விடுபட்டு, பெரும் உற்சாகத்துடன் சூர்யாவின் '24' படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

சூர்யாவின் '24' படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படக்குழுவினர்களுடன் தன்னையும் நேற்று முதல் இணைத்து கொண்டார் சமந்தா. ஏற்கனவே '24' இயக்குனரின் இயக்கிய 'மனம்' படத்தில் நடித்த நடிகை சமந்தா மீண்டும் அவருடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். சூர்யாவின் 'சில்லுன்னு ஒரு காதல்' படத்திற்கு பின்னர் இந்த படத்திற்குத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top