↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad   சோனாவுக்கு ₹1 கோடி கொடுக்க வேண்டும்- வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு

குசேலன்’, ‘அழகர் மலை’, ‘பத்து பத்து’, ‘ஒன்பதுல குரு’, ‘சோக்காலி’ உட்பட பல படங்களில் நடித்தவர், சோனா. யுனிக் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனி மூலம் படம் தயாரிக்க முடிவு செய்த அவர், 2009ல்  அதற்கான வேலைகளை தொடங்கினார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு, சோனா தயாரிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இதையடுத்து சோனா, வெங்கட் பிரபுக்கு சம்பளம் பேசி, ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், வெங்கட் பிரபு சோனாவுக்கு படம் இயக்கிக் கொடுக்கவில்லை.  இதனால் சோனா, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  நடிகர் சங்கம் மற்றும்  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெங்கட் பிரபு மீது புகார் கொடுத்தார் சோனா. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார், வெங்கட் பிரபு, சோனா மற்றும் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சோனாவுக்கு படம் இயக்காத வெங்கட் பிரபு, அவரிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாயில், மே மாதத்துக்குள் ஒரு கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.இதுபற்றி சோனாவிடம் கேட்டபோது, பேச மறுத்து விட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top