↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அருமை பெருமையான அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் கட் அவுட், தட்டி, போஸ்டர் போடுவதா.. சினிமா ஸ்டார்களுக்கும் அதேபோல போட்டு உலகளாவிய சாதனை படைத்தவர்களாயிற்றே நமது தமிழக மக்கள்.. அந்த வரிசையில் விளாத்திகுளத்தில் ஒரு வித்தியாசமான போர்டு கண்ணில் பளிச் என பட்டது. நடிகை திரிஷாவின் ரசிகர்கள் வைத்த போர்டுதான் அது. அதில் என்ன காமெடி என்றால், அந்த விளம்பரத்தை வைத்தவர்கள் 1958ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்கள்.. அட ஆமாங்க, ரொம்ப வயசான தாத்தாக்கள்தான்.

இவர்கள் வைத்துள்ள போர்டில் இருப்பது இதுதான்... 


திரிஷாவின் சிரிப்பு.. திகட்டாத இனிப்பு 
மே 4ல் பிறந்த நாள் காணும் 
சினிமா உலகின் சிரிப்பு ராணி 
செல்வி திரிஷாவே வாழ்த்துகிறோம்.. மனமுவந்து.. 
வாழ்க வாழ்க எங்களைப் போல 
பல்லாண்டு வாழ்க 

என்று பர்த்டே விஷ் கூறியுள்ளனர். 

கீழே 8 தாத்தாக்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் போடப்பட்டுள்ளன. அருகே 1958 எஸ்எஸ்எல்சி மாணவர்கள் என்று போட்டு முடித்துள்ளனர். இது இந்த தாத்தாக்கள் செய்த வேலையா.. அல்லது அவர்களை மாட்டி விட அவர்களது பேரப்பிள்ளைகள் செய்த குசும்பா என்றுதான் தெரியவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top