↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படத்தின் ரிலீசில் திடீர் மாற்றம்..!
கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. முதன்முறையாக சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி,
சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பேண்டசி படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, நட்ராஜ் ஔிப்பதிவு செய்கிறார். எஸ்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் விஜய்யின் பிஆர்ஓ., செல்வகுமாரும், சிபு கே. தமீனும் தயாரிக்கின்றனர். புலி படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் பிரம்மாண்ட செட் போட்டு முதலில் படமாக்கப்பட்டது.
பின்னர் கேரளாவில் உள்ள மலைப்பகுதிகளில் மலை கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படம் பிடித்தார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இப்போது ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் புலி படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற ஏப்ரல் 29ம் தேதியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. விஜய் படங்களிலேயே புலி படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும் சரித்திர காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருப்பதால் கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் விஜய் பிறந்தநாளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேசமயம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் பொருட்டு, புலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். படத்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top