↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓகே கண்மணி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருக்கின்றது. பெரும்பாலான ஊடகங்கள் படத்தை உயர்வாக விமர்சனம் செய்துள்ள நிலையில் கோலிவுட் திரையுலக பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் பகிர்ந்துள்ளனர். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு பார்ப்போம்.
 
கௌதம் மேனன்: ’மணிரத்னம் சார் மீண்டும் ஒரு டிரண்டை உருவாக்கியுள்ளார். எனக்கே ஒரு காதல் கதை எழுத வேண்டும் என்பது போல உணர்ந்தேன்’ ரெஸ்பெக்ட் சார். படத்தின் தொழில்நுட்பமும் இசையும் தரமாக உள்ளது. விஷுவல் காட்சிகள் உறைய வைக்கிறது. துல்கர் சல்மானின் எளிமையான, கட்டுப்பாடான நடிப்புடன், நித்யா மேனன் அவருடைய பெர்ஃபார்மென்ஸால் கட்டி போடுகிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உயிர்ப்பாக இருக்கிறது.
 
சூர்யா: ஓகே கண்மணி படத்திற்கு  நல்ல விமர்சங்களை பார்க்கின்றேன். விரைவில் இந்த படத்தை பார்ப்பேன் என நம்புகிறேன்
 
ரவி கே . சந்திரன்: இந்த படத்தை பார்க்கையில் மணிரத்னத்திற்கு 25 வயது, பி.சி.ஸ்ரீராமிற்கு 22 வயது, ஏ.ஆர்.ரஹ்மானிற்கு 21 வயது போல தெரிகிறது. முழுமையான இள வயது அதிர்வுகளை கொண்ட ரொமண்டிக் படம்.
 
கார்த்தி சுப்புராஜ்: சூப்பர் பெர்ஃபாமென்ஸ், ஆத்மார்த்தமான இசை, அழகான ஷாட்கள், மென்மையான ரொமாண்டிக். மாஸ்டர் எல்லா வகையிலும் நிரூபித்துள்ளார்.
 
அசோக் செல்வன்: அழகான படம், மிகவும் உண்மையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பி.சி.ஸ்ரீராம் ஜீனியஸ், மணி சார் இன்னும் சிறப்பாகவே இருக்கிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்திலிருந்து சந்தோஷமாக வந்திருக்கிறேன். துல்கர் அருமை, தாரா மேல் காதலில் விழுந்து விட்டென்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top