↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விக்ரம் நடித்து வரும் "10 எண்றதுக்குள்ள' படத்தின் நேபாள படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துவிட்டு சூர்யாவின் '24' படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டுள்ள நடிகை சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள புதிய திரைப்படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கனவே மகேஷ்பாபுவுடன் டூக்குடு (Dookudu) மற்றும் சீதம்மா வகிட்லோ சிரிமல்லே சேட்டு (Seethamma Vakitlo Sirimalle Chettu) ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள சமந்தா தற்போது மூன்றாவது முறையாக அவருடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கண்ட இரண்டு படங்களை இயக்கிய ஸ்ரீகாந்த் அடலா என்பவரே இந்த படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரைப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், அதில் சமந்தா மெயின் ஹீரோயினியாக நடிக்கவுள்ளதாகவும், மற்ற ஹீரோயின்களாக நடிக்க டாப்சி மற்றும் ப்ரணிதா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top