↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

'உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்  ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் விறுவிறுப்பான துப்பறியும் மற்றும் த்ரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்களை தேர்வு செய்வதில் அவர் தற்போது பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாகவும் த்ரிஷா விரைவில் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே த்ரிஷா, கமல்ஹாசனுன் 'மன்மதன் அம்பு' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே இரவில் நடைபெறும் த்ரில் சம்பவங்கள் அடங்கிய இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஸ்டைலிஷான கேரக்டர் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதி வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

த்ரிஷா ஏற்கனவே 'போகி' என்ற த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மற்றொரு த்ரில்லர் படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top