↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழில் ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் சன்னி லியோன். பாலிவுட்டில் கவர்ச்சி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவரது கடந்த காலம் கசப்பானது. வெளிநாட்டில் வாழ்ந்தபோது ஆபாச படங்களில் நடித்து வந்தார். பாலிவுட்டில் நடிகையானபிறகு ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் அவருக்கு வரும் வேடங்கள் படுகவர்ச்சியாகவே அமைந்துள்ளது. அரை நிர்வாணம், படுக்கை அறை காட்சிகள் அதிகம் கொண்ட கதைகளுக்கே அவரை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். அவரும் நடித்து வருகிறார்.பாலிவுட் ஹீரோயின்கள் ஐஸ்வர்யாராய் தொடங்கி பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் வரை எல்லா நடிகைகளுமே ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் இணைய தளங்களில் கருத்து வெளியிடுவதோடு அவ்வப்போது விருதுகளுக்கும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மும்பையிலோ அல்லது வெளிநாடுகளிலோ நடக்கும் விழாக்களுக்கு சகல மரியாதையுடன் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் சன்னி லியோனை பாலிவுட்டே புறக்கணித்து வைத்திருக்கிறது. சமீபத்தில் அவரிடம் விருது பெறுவது எப்போது என்று கேட்டபோது,’விருதா? அது கனவில்கூட எனக்கு கிடைக்காது. எனது பழைய வாழ்க்கை அப்படி அமைந்துவிட்டது. அதற்காக ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டி என் பழைய வாழ்க்கையை மறந்துவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது, இணைய தளத்தில் வரும் என்னுடைய கிளுகிளுப்பான படங்களை நான் டெலிட் செய்யவும் முடியாது. என் வாழ்க்கையில் விருது கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
0 comments:
Post a Comment