↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
மணிரத்னம் இயக்கியுள்ள 'ஓகே கண்மணி' நாளை முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை பெற்றுள்ள ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தியேட்டர்களை புக் செய்யும் பணியில் முழு வீச்சில் இருக்கும் நிலையில் 948 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய தியேட்டரான சத்யம்' தியேட்டரில் இந்த படம் வெளியாக உள்ளது. ஆனால் இந்த தியேட்டரில் 'ஓகே கண்மணி' ஒரே ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இதே காம்ப்ளக்ஸில் உள்ள சாந்தம் தியேட்டரில் 3 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
மேலும் தமிழகத்தில் சுமார் 250 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 164 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்திற்கு இன்னும் ஒருசில வெளிநாட்டு தியேட்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்று மாலைக்குள் மொத்த தியேட்டர்கள் விபரம் தெரிய வரும். வெளிநாடுகளை பொருத்தவரையில் அமெரிக்காவில் 65 தியேட்டர்களிலும், மலேசியாவில் 21 தியேட்டர்களிலும், சிங்கப்பூரில் 2 தியேட்டர்களிலும், ஆஸ்திரேலியாவில் 12 தியேட்டர்களிலும், பிரிட்டனில் 14 தியேட்டர்களிலும் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
துல்கார் சல்மான், நித்யா மேன, ரம்யா, லீலா சாம்சன், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.