↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை "ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்திற்காக பெற்ற பொன்னான நாளை எளிதில் மறந்து விட முடியாது. அதே நாளில் அதே படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டியையும் அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்பலாம். சிறந்த சவுண்ட் மிக்சிங் பணிக்காக அவர் அந்த படத்திற்கு ஆஸ்கார் விருதை பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன், கோச்சடையான், ஜீவா நடித்த 'யான்' உள்பட பல படங்களுக்கு சவுண்ட் மிக்சிங் பணியை செய்த ரசூல் பூக்குட்டி, தற்போது இயக்குனராக மாறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அவர் சமீபத்தில் கூறியபோது 'நான் என்னுடைய அடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய காலகட்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். சவுண்ட் மிக்சிங் பணிகளை அடுத்து திரைப்படங்களை தயாரிக்கவும், இயக்கவும் முடிவு செய்துள்ளேன். ஆனால் இந்த முடிவை உடனடியாக செயல் வடிவிற்கு கொண்டு வர முடியாது என்றாலும் கூடிய விரைவில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவேன் என்பது மட்டும் உறுதி' என்று கூறியுள்ளார். ரசூல் பூக்குட்டி இவ்வருட இறுதியில் மலையாள திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்குவார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top