↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது 'ஹைக்கூ' மற்றும் '24' படத்தில் நடித்து வருகிறார். மாஸ் திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ்காவுள்ள நிலையில் சூர்யா விரைவில் ஒரு நேரடி பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான நந்திதா சின்ஹா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக சூர்யா இருப்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தின் இந்தி பதிப்பில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் முன்னணி நடிகை 'ப்ரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் நடிக்க முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடன் 'தமிழன்' என்ற தமிழ்ப் படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top