↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி(31). அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு தான் கமல் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது ப்ரியாவுக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவர் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். ஃபேஸ்புக்கில் தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்த ப்ரியா தனது கை நரம்பை நறுக்கி தற்கொலை செய்து கொண்டார். 


இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் ப்ரியாவை தேடிக் கொண்டிருக்கையில் ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கதவை திறக்கவில்லை என்று போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ப்ரியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top