↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஈ படத்திற்குப் பிறகு ஜீவா, நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் படத்துக்கு திருநாள் எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்ததை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஆக்ஷன், காமெடியை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. மேலும் படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் முதல் முறையாக ஈ படத்தில் ஜீவாவும் நயன்தாராவும் ஜோடி சேர்ந்தனர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இடையில் நயன்தாரா நடித்து வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தார் ஜீவா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top