↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இங்கிலாந்தில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவரான ராம் மனோகர் 2 நர்ஸுகளிடம் தகாத முறையில் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மருத்துவரான ராம் மனோகர்(38) இங்கிலாந்தில் பணியாற்றி வருகிறார். அவர் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள விர்ரலில் இருக்கும் ஆரோ பார்க் மருத்துவமனையில் பணிபுரிந்த போது நர்ஸ் ஒருவருக்கு பயிற்சி அளிக்க உதவி செய்ய முன்வந்துள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நர்ஸுக்கு மார்பகங்களை எப்படி எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளார்.

அப்போது அவர் அந்த நர்ஸின் ஆடைக்குள் கையை விட்டு அவரது பிராவுக்குள் கையைவிட்டிருக்கிறார். அதன் பிறகு இதயம் பற்றி கற்பிக்கிறேன் என்ற பெயரில் நர்ஸின் இடது மார்பகத்தை பிடித்துள்ளார் ராம். பின்னர் அந்த நர்ஸின் பின்புறத்தில் தட்டியுள்ளார். இது குறித்து நர்ஸ் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டை ராம் மறுத்துள்ளார். நர்ஸ் தான் தனது சட்டையை திறந்துவிட்டு ஒரு நாய்க்குட்டி போல் தன் பின் வந்ததாக ராம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நர்ஸும் ராம் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். ராம் தன்னை 2013ம் ஆண்டில் ஜூலை 10 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் கண்ட இடத்தில் தொட்டதாக தெரிவித்துள்ளார். முதல் தடவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது ராம் அந்த நர்ஸை பரிசோதனை செய்கிறேன் என்ற பெயரில் அவரின் மர்ம உறுப்பை தொட்டுள்ளார். நர்ஸும் அவர் தவறான எண்ணத்தில் தொடவில்லை என நினைத்து நன்றி தெரிவித்துள்ளார். இரண்டாவது முறை தலைவலிக்கு சிகிச்சை பெற சென்றபோதும் அவரின் மர்ம உறுப்பை ராம் தொட்டுள்ளார்.

இந்த புகாரையும் ராம் மறுத்துள்ளார். நான் ஒன்றும் அவரின் உள்ளாடைக்குள் கையைவிடவில்லை. அவர் தான் என் கையை அங்கு எடுத்துச் சென்றார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று நான் நர்ஸிடம் தெரிவித்தேன் என்றார் ராம். இந்த புகார்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top