↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தென்னிந்திய பெண்கள் கருப்பாக இருந்தாலும் அழகானவர்கள் என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் காப்பீடு மசோதா குறித்த விவாதம் நேற்று முன்தினம் நடந்த போது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் பேசினார்.

அவர் பேசுகையில், இந்திய ஆண்கள் கருப்பாக உள்ளதால் பெண்கள் வெள்ளையாக இருப்பது அவர்களுக்கு பிடிக்கிறது.

எனவே தான் அவர்கள் மணமகள் தேவை விளம்பரத்திலும் சிவப்பான மணமகளையே எதிர்பார்கின்றனர்.

ஆனால், தென் இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் கருப்பானவர்களாக இருந்தாலும், அழகானவர்களாகவும், சிறந்த உடல்கட்டை பெற்றவர்களாகவும் உள்ளனர் என்று பேசியுள்ளார்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதைப் பெற்ற சரத் யாதவின் இந்த பேச்சுக்கு தற்போது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top