திரையுலகில் அறிமுகமாகி பத்தாண்டிற்கு மேலாகியும் நடித்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவருக்கு சமீபத்தில் தான் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது.
விரைவில் திருமணம் நடைப்பெற இருக்கிறது. த்ரிஷா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கர்’ படத்திலும், ‘போகி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
10 வருடங்களுக்கும் மேலாக தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருவது சாதாரண விஷயமல்ல. த்ரிஷா நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களே. சமீபத்தில் அஜித் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் த்ரிஷா அதிகம் பேசப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் த்ரிஷா அவருடைய சமூக வலைத்தளத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் சொன்ன பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். த்ரிஷாவைப் பற்றி அனைவருமே பாராட்டித் தள்ளியிருந்தார்கள். திரையுலகில் பலராலும் நேசிக்கப்படும் நட்சத்திரமாக த்ரிஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதில் கௌதம் மேனனின் பாராட்டுதான் ஆஹா, ஓஹோ என்று அமைந்துள்ளது.
த்ரிஷாவை பற்றி கௌதம் மேனன் கூறுகையில், த்ரிஷா என்னுடைய அபிமான நடிகை. நான் எப்போது கதை எழுதினாலும் அதில் த்ரிஷாதான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருப்பார் என்றார். அதேபோல் சமந்தா, நான் த்ரிஷாவின் தீவிரமான ரசிகை என்று கூறினார். சமீபத்தில் எமி ஜாக்ஸன் கூட த்ரிஷா எனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியிருந்தார்.
அதேபோல் த்ரிஷாவுடன் நடித்த ஆர்யா, விஷால், ஜெயம் ரவி ஆகியோர் த்ரிஷா எங்களுடைய சிறந்த தோழி என்றும், நாங்கள் அவருடைய தீவிரமான ரசிகர்கள் என்றும் கூறினார்கள்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கூட, என்னுடன் நடிப்பவர்களில் பிடித்த நடிகை த்ரிஷாதான் என்று கூறியுள்ளார். இவர்களின் பாராட்டினால் த்ரிஷா மகிழ்ச்சியில் இருந்தாலும் இதை பார்த்த வருண் மணியனோ அன்பு பொறாமைப்படுகிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.