
தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள... படத்தில் பிஸியாக இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. கூடவே, என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து விக்ரமை வைத்து புதிய படமொன்றை கௌதம் மேனன் இயக்க இரப்பதாகவும், அப்படத்தின் வேலைகள் உடனடியாக தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்றும் சொல்லப்பட்டது.
விக்ரம் நடிக்கும் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார் என்றால், ஏற்கனவே தொடங்கப்பட்ட சிம்பு, பல்லவி சுபாஷ் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படம் என்னாச்சு? என்ற கேள்வி எழுந்தது. சிம்பு படத்தை ட்ராப் பண்ணிவிட்டே விக்ரம் நடிக்கம் படத்தை கௌதம் மேனன் தொடங்கி உள்ளார் என்று ஒரு தகவல் அடிபட்டது. தற்போது வெளியாகும் செய்திகள் அதற்கு நேரம் மாறாக இருக்கின்றன. அதாவது ஆக்ஷன், காதல் கலந்த கலவையாக உருவாகி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பு வேலைகளை அசுர வேகத்தில் முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் கௌதம் மேனன். அதாவது மே மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து ஜூலைக்குள் இப்படத்தைத் ரிலீஸ் பண்ண இருக்கிறாராம். தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்கி முடிக்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.