↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

நடப்பு உலக கோப்பையில் இந்தியா இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும், எதிரணிகளின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி நிர்மூலமாக்கியுள்ளது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா கடந்த உலக கோப்பையில் படைத்த சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்திய பவுலர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், உலக கோப்பையில் அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். உலக கோப்பையில் இதுவரை விளையாடிய போட்டிகளில் எதிரணிகளை ஆல்அவுட் செய்து கலக்கியுள்ளனர் இந்திய வீரர்கள்.

இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 47 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. 

2வது லீக் ஆட்டத்தில் 40.2 ஓவர்களில், தென் ஆப்பிரிக்காவை 177 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா.

3வது லீக் போட்டியில், 31.3 ஓவர்களிலேயே, யு.ஏ.இ அணியை 102 ரன்களில் சுருட்டியது இந்தியா.

44.2 ஓவர்களில், வெஸ்ட் இண்டீசை 182 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. இது நான்காவது லீக் ஆட்டம்.


அதிரடி காண்பித்த அயர்லாந்தை, கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்தி 49வது ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா.

இன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியிலும், நடுவில் சிறிது ரன்களை வாரிக் கொடுத்த இந்திய பவுலர்கள், அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை சாய்த்து, 48.5 ஓவர்களில் 287 ரன்களுக்கு அந்த அணியை ஆல்-அவுட் செய்தனர்.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே படைத்திருந்த சாதனையை, இந்தியா இன்று சமன் செய்தது. 2011 உலக கோப்பையின்போது, தென் ஆப்பிரிக்கா, தொடர்ந்து 6 அணிகளை, நிர்மூலமாக்கி, 60 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top