பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹோலண்டேவும்-வலெரியும்(Francois Hollande-Valerie) சுமார் 9 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் ஹோலண்டேவுக்கு பிரெஞ்சு நடிகை ஜூலி கேயட்டுடன்(Julie Gayet) கள்ளத்தொடர்பு இருப்பது நாடெங்கும் தெரியவந்ததையடுத்து, ஹோலண்டேவும்-வலெரியும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று வலெரி சாலையில் சென்று கொண்டிந்தபோது, ஹோலண்டே எப்படி இருக்கிறார்? என நபர் ஒருவர் கிண்டலாக கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த வலெரி, அந்நபர் இவ்வாறு பேசியதற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.
ஆனால், அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால், வலெரி அவரை கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக அறைவாங்கிய நபர் தற்போது பொலிசில் புகார் செய்துள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.