↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஈராக்கில் கடவுளுக்கு எதிராக பேசியவரையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாய் தலைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ், தொடர்ந்து பல அட்டூழியங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள நைனிவெஹ்(Nineveh) மாகாணத்தில் மூன்று நபர்களை சாலையின் நடுவே இழுத்து வந்த தீவிரவாதிகள், அவர்களின் கண்களை கட்டி மண்டியிட செய்தனர்.
இதில் ஒரு நபர் அல்லாவை அவமதித்து கருத்துகளை வெளியிட்டதாகவும், மற்ற இரு நபர்கள் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டதாகவும் தீவிரவாதி ஒருவன் ஒலிபெருக்கியின் மூலம் அங்குள்ள மக்களுக்கு அறிவித்துள்ளான்.
இதன்பின் பெரிய வாளை ஏந்தியபடி வந்த மற்றொரு தீவிரவாதி, அந்த மூன்று நபர்களையும் தலைத் துண்டித்து கொலை செய்துள்ளான்.
மேலும் எவரேனும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களுக்கும் இதே கதி தான் என தீவிரவாதிகள் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையே ஒவ்வொவரையும் கொல்லும்போது, அங்கிருந்த மக்கள் கைத்தட்டி தீவிரவாதிகளை உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top