
லிங்கா படத்தினால் ஏற்பட்ட பிரச்சனையால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார் ரஜினி.
கோச்சடையான், லிங்கா படத்தினால் இழந்த மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இன்னும் ஒரு சில படங்களில் மட்டும் தான் நடிக்க முடியும் என்பதால் அடுத்த படத்திற்கான கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வரும் படமும் தோல்வியாக அமைந்து விட்டால் ரசிகர்கள் மொத்தமாக தூக்கி எறிந்து விடுவார்களோ என்ற அச்சம் ரஜினியிடம் உள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை ஷங்கர், ராஜமௌலி இவர்களில் ஒருவர் இயக்கலாம் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் புதிதாக இந்த பட்டியலில் முருகதாஸ் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி படத்தை துவக்குவதற்கு முன்னரே, ரஜினியிடம் ஒரு கதையை கூறியிருந்தார். அப்போது ரஜினி, வேறுபடங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முடியவி்ல்லை. ஏற்கனவே ரஜினி, முருகதாஸிடம், நான் இன்னும் சில படங்களில் தான் நடிப்பேன். அதில் ஒரு படம் உங்கள் படம் என்று கூறியிருந்தார். தற்போது அதற்கான காலம் உருவாகி விட்டதாக, ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.