
பிரபல நடிகர் பிரின்ஸ் மகேஷ் பாபு அடுத்ததாக ஸ்ரீகாந்த் அட்டளா இயக்கத்தில் நடிக்கிறார். அவர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் த்ரிவிக்ரம் தற்போது சன் ஆப் சத்தியமுர்த்தி படத்தில் பிஸியாக இருக்கிறார். மேலும் மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி ஆகவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து பணியாற்ற மகேஷ் பாபு முடிவெடுத்து உள்ளார். இந்த படத்திற்கு பிரம்மோத்சவம் என்று தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப பின்னணியை கொண்ட சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்கி ஜே மெயெர் இசை அமைக்கிறார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று தெரிகின்றது. பி வி பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.