↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கடலூரில் ஒருதலைக்காதலால் தீக்குளித்த இளைஞர் ஒருவர் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அப்பெண் படுகாயமடைந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் நடியப்பட்டையைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்துள்ளார். அப்போது அதே பள்ளியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த அனுசுயா என்பவரும் பிளஸ்- 2 படித்து வந்துள்ளார். அன்று முதல் சந்தோஷ் அனுசுயாவைக் காதலித்து வந்துள்ளார்.
சந்தோஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியிலும், அனுசுயா கோவை தனியார் கல்லூரியிலும் படித்த போதும் அனுசுயா சந்தோஷின் காதலை ஏற்கவில்லை. இந்த நிலையில் கல்லூரிப் படிப்பை முடித்த அனுசுயா தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் பணிக்கு தினமும் பாலக்கோட்டில் இருந்து வேலைக்குச் சென்று வருகிறார். இதையறிந்த சந்தோஷ், அனுசுயாவை திருமணம் செய்துகொள்வதற்காக அவரது வீட்டுக்குச் சென்று பெண் கேட்டாராம். இதற்கு அனுசுயா குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்த நிலையில் புதன்கிழமை அனுசுயா கெலமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலை வாங்கி அதை தன்மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்ட அவர் பேருந்தில் இருந்து இறங்கிய அனுசுயாவையும் கட்டிப் பிடித்துள்ளார்.
இதில் அப்பெண்ணின் உடலிலும் தீப்பற்றியது. இதைக் கண்ட பொதுமக்கள் இருவர் உடலிலும் பற்றிய தீயை அணைத்தனர். இருவரும் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சந்தோஷ் ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீஸார் அனுசுயா மற்றும் சந்தோஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Home
»
news
»
news.india
» ஒருதலைக்காதல் விபரீதம் – தனக்குத்தானே நெருப்பு வைத்து காதலித்த பெண்ணையும் கட்டிபிடித்த இளைஞர்
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.