
மேடிசன் ஸ்கொயர் கார்டனரில் நடைபெற்ற இந்த போட்டியில் முன்னணி வீரர்களான ரோஜர் பெடரர், கிரிகோர் திமித்ரோவ் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வந்த ஒரு சிறுவன், திமித்ரோவின் டென்னிஸ் மட்டையை எடுத்தான். இதனையடுத்து அவரை மைதானத்திற்குள் அழைத்து பெடரருடன் விளையாட வைத்தனர்.
சின்னப் பையன்தானே என்று மெதுவாக தட்டித் தட்டி விளையாடத் தொடங்கிய பெடரருக்கு சில வினாடிகளில் அந்த சிறுவன் அதிர்ச்சி அளித்தான்.
ஒரு புள்ளி எடுத்து அசத்திய அந்த சிறுவனின் ஆட்டத்திறனை பெடரர் பாராட்டி அனுப்பி வைத்தார். அப்போது பார்வையாளர்கள் மிகுந்த கரகோஷம் எழுப்பினர்.
கண்காட்சிப் போட்டிகளின் போது இது போன்ற வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். இந்த ஆட்டம் அந்த சிறுவனுக்கு மட்டுமல்ல, பெடரருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவம் என்பதில் சந்தேகமில்லை.
|
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.