
தமிழ் திரைப்பட முன்னாள் நடிகர் முரளியின் தந்தையும் கன்னட திரைப்படத்தின் வெற்றி இயக்குனருமான எஸ். சித்தலிங்கய்யா நேற்று மரணமடைந்தார்.
‘மேயர் முத்தண்ணா‘, ‘பங்காரத மனுஷ்ய‘ மற்றும் ‘பூதய்யனு மக அய்யு‘ போன்ற கன்னட வெற்றி படங்களை தந்தவர் எஸ். சித்தலிங்கய்யா. சில நாட்களுக்கு முன்பு பன்றி கய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் பெங்களூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவரது உடலில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் உடல் உறுப்புகள் செயலிழந்தன. இதை தொடர்ந்து எஸ். சித்தலிங்கய்யா சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பன்றி காய்ச்சல் பாதிப்பில் இருந்து சித்தலிங்கய்யா குணம் அடைந்தார். ஆனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்தார்“ என்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.