↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் செய்த தவறான செயல் இந்திய அணித்தலைவர் டோனியை கோபத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது.
நெருக்கடியான சூழ்நிலையையும் இந்திய அணித்தலைவர் டோனி பொறுமையுடன் சமாளிப்பார். இதனால் அனைவரும் அவரை `கூல்’ கேப்டன்’ என்று அழைப்பார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்ததால் டோனி ஒருவித நெருக்கடியிலேயே விளையாடினார்.
7வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த அஸ்வினிடம் ஒவ்வொரு முறையும் டோனி அறிவுரை கூறி ஆட்டமிழக்காமல் பொறுமையுடன் ஆடுமாறு வலியுறுத்தினார். அவரும் அதே அப்படியே செய்து வந்தார்.
இந்நிலையில் டோனி அடித்த பந்தில் அஸ்வின் தேவையில்லாமல் 2வது ஓட்டம் ஓடி வந்தபோது டோனி கோபம் அடைந்தார். பந்தை பார்த்து ஓடுமாறு கோபமாக அவர் சைகையில் உணர்த்தினார்.
மேலும் ஓடும் போது இருவரும் ஒரே திசையில் ஓடியதால் மோதிக்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிரித்தபடியே அஸ்வின் டோனியின் வார்த்தையை பின்பற்றினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top