↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க தாம் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என தான் எந்த வகையிலும் எதிர்பார்க்கவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளார். இன்று மாலை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் அவரே, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு வழங்கியுள்ளது.
எமது 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு அவர்களுக்கு நன்றி, தேர்தலுக்கு பின்னர் அனைத்து கட்சிகளும் சேர்ந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளது. இது புதிய முறை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் கூச்சலிடும் கூட்டம் ஒன்று உள்ளது. அந்த கூட்டத்தை நுகேகொடை கூட்டம் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top